ஐ.நா. அலுவலகம் நோக்கி ஹூரியத் பேரணி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து புகார் அளிப்பதற்காக ஹூரியத் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்பாளர்கள் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.
அமர்நாத் விவகாரம் தொடர்பாக ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாறி மாறி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெருமளவில் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. ராணுவ கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஹூரியத் ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது.
இதையடுத்து இன்று காலை பேரணி தொடங்கியது. ஐ.நா. அலுவலகம் அருகே இந்தப் பேரணி தொடங்கியது. லாரி மற்றும் பஸ்களில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
இந்த பேரணியல் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. பேரணியையொட்டி மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும் கூட்டத்தினர் அத்துமீறினால் அவர்களை குறைந்த சக்தியைக் கொண்டு கலைக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம் எனவும் பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே, அமர்நாத் சங்கர்ஷ் சமிதி, தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சிறை நிரப்பும் போராட்டத்தையும் அது அறிவித்துள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது.
இதேபோன்ற சிறை நிரப்பும் போராட்டத்தை ஆகஸ்ட் 21ம் தேதியன்று நடத்தப் போவதாக ஏற்கனவே பாஜகவும் அறிவித்துள்ளதால் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் பரபரப்பாகவே உள்ளது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications