ஹூண்டாய் கார் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் நிறுவனத்தில் உள்ள பெயிண்ட் ஆலை சேதமடைந்தது.
இன்று வார விடுமுறை என்பதால் ஹூண்டாய் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை. சிலர் மட்டுமே பெயிண்ட் பிரிவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பி விட்டனர்.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் இந்தர்ஜித் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.












Click it and Unblock the Notifications