நெல்லை-திருச்செந்தூர் ரயில் சேவை 26ல் தொடக்கம்
நெல்லை: நெல்லை-திருச்செந்தூர் இடையிலான அகலரயில் பாதை பணி முடிந்துவிட்டது. இதையடுத்து வரும்
26ம் தேதி ரயில் சேவை தொடங்கப்படுகிறது.
நெல்லை-திருச்செந்தூர் இடையிலான மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து கடந்த 2006 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு ஜனவரியில் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் சுமார் ரூ.70 கோடியில் தொடங்கப்பட்டது. 62 கிமீ தூரமுள்ள இந்த பாதையில் புதிதாக 194 பாலங்கள் கட்டப்பட்டன.
புதிய பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், தண்டவாளம் அமைக்கும் பணி அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சிஜேஎஸ் நாயுடு கடந்த ஆகஸ்ட் மாதம் 18 முதல் 20ம் தேதி வரை பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு 120 கி.மீ. வேகத்தில் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையி்ல் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரயில் சேவை வரும் 26ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கான விழா திருச்செந்தூரில் நடைபெறுகிறது. விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு கொடியசைத்து ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications