ஈழ தமிழர்கள் மீது தாக்குதல்: அக்.2ல் சிபிஐ உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து காந்தி ஜெயந்தி அன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தமிழர்களின் அடிப்படை மனித உரிமை, அரசியல் உரிமைகளை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. ராணுவ தாக்குதல் மூலம் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாக்குதல்களை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதை இந்தியா உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண அந்நாட்டை நிர்பந்திக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி சிபிஐ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

அங்கு தமிழர்களின் உயிருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. உதவி செய்து வந்த ஐநா உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து அனுப்பிய உணவு, மருந்து பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள அகதி முகாம்களில் உணவு போய் சேராமல் பட்டினி கிடக்கின்றனர். பட்டினி சாவும் நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+