சென்னை கடலில் 6 இலங்கை மீனவர்கள் கைது
சென்னை: இந்திய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் இரவு இந்திய கடல் எல்லைக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் இலங்கைக்கு சொந்தமான விசைப் படகு சென்று கொண்டிருந்தது தெரிந்தது.
இதைப் பார்த்த கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த விசை படகை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக படகில் இருந்த அனுந்துசேசி (29), நந்துடீரா (29), சமந்தா (30), நம்புகோரலா (30) மற்றும் மூவலு சாண்டிகே (28), லோகு எண்டிகே (26) ஆகிய 6 இலங்கை மீனவர்களை கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அவர்கள் கொண்டு வரப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications