For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம் - துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் மதுரையைச் ேசர்ந்த மீனவர் உயிரிழந்தார்.

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், தாக்கி காயப்படுத்துவதும், படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதற்கு விடிவே கிடையாதா என்ற ஏக்கத்திலும், சோகத்திலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை தனது வெறியாட்டத்தை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியைச் ேசர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கை கடற்படை வந்தது.

தமிழக மீனவர்களை சுற்றிச் சூழ்ந்த கடற்படையினர், சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் முதுகில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X