ஒரே காரில் 49 பேருடன் வலம் வந்த பெண்
திருச்சி: ஒரே காரில் 49 பேரை ஏற்றி 2 கிலோமீட்டர் தூரம் ரவுண்டு அடித்து லிம்கா சாதனை படைத்துள்ளார் திருச்சிையச் சேர்ந்த டிரைவிங் பள்ளி பெண் உரிமையாளர் பூங்கொடி.
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் அதே பகுதியில் டிரைவிங் பள்ளி நடத்தி வருகிறார். சென்னையை சேர்ந்த கிரிபக்ரி என்பவர் கடந்த 1995 ம் ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதி அன்று ஒரே காரில் 42 பேரை வைத்து ஒட்டி லிம்கா சாதனை படைத்தார்.
இச் சாதனையை முறியடிக்கும் விதத்தில் 49 பேரை காரில் செல்வது என பூங்கொடி முடிவு செய்தார். அதன்படி, திருச்சி சின்னக்கடை வீதியில் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரே மாருதி காரில் 49 பேருடன் சின்னக்கடை வீதி, தெப்பக்குளம், ஆண்டார் வீதி, மலைக்கோட்டை வழியாக சுமார் 2 கி.மீ. தூரத்தை 13.43 நிமிடத்தில் சுற்றி வந்து பூங்கொடி சாதனை படைத்தார்.
அவருக்கு சமூகசேவர்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
வெல்டன் பூங்கொடி.