நிதி நெருக்கடி: மிட்டலுக்கு ரூ.13,800 கோடி நஷ்டம் - ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கோடி!
லண்டன்: சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்புகள் பல பெரும் தொழிலதிபர்களையும் பாதித்துள்ளது. உலகப் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான நம்ம ஊர் லட்சுமி மிட்டலின் நிறுவனமும் இதற்குத் தப்பவில்லை.
நிதி நெருக்கடி காரணமாக மிட்டல் இழந்துள்ள தொகை 16.6 பில்லியன் பவுண்டுகள் (ஒரு பவுண்ட் மதிப்பு: ரூ. 83). அதாவது சுமார் 13800 கோடி ரூபாய்!
இந்த நெருக்கடியில் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ள டாப் 10 உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் லட்சுமி மிட்டல்தான் என சண்டே டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இவர் வாங்கிய ஆர்செலர் ஸ்டீஸ் நிறுவனத்தில் மிட்டலுக்கு 33.24 பில்லியன் பவுண்ட் பங்குகள் இருந்தன.
இப்போது அந்த பங்குகளின் மதிப்பு 16.63 பில்லியனாகக் குறைந்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்துக்கு 6 மில்லியன் பவுண்ட் - ரூ.50 கோடி ரூபாய்!
மற்றொரு தொழிலதிபரான அனில் அகர்வால் 2.7 பில்லியன் பவுண்ட் இழப்புக்கு உள்ளாகியுள்ளார்.