ஓபிசி உச்சவரம்பு அதிகரிப்புக்கு கருணாநிதி வரவேற்பு
சென்னை: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமி லேயர் பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்த பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு, ரூ. 2.5 லட்சத்திலிருந்து, ரூ. 4.5 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முதல்வர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த முடிவு வரவேற்புக்குரியது. அதேபோல, கல்வி மற்றும் சமூக ரீதியில், பின்தங்கியுள்ள பிற்பட்ட வகுப்பினருக்கான உச்சவரம்பை முழுமையாக நீக்க வேண்டும்.
மத்திய அரசின் முடிவினால், இட ஒதுக்கீட்டின் முழுப் பலனையும் பிற்பட்ட வகுப்பு மாணவர்களால் அடைய முடியும். நிறைய மாணவர்கள் இதனால் பலன் அடைவார்கள். இருப்பினும் இது ஒரு தற்காலிகமான தீர்வே. வருமான உச்சவரம்பை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications