பாகிஸ்தானுக்கு இந்தியா ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி
நியூயார்க்: பாகிஸ்தானுக்கு இந்தியா ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
நியூயார்க்கில் இருந்து வெளி வரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரவாதிகள்தான் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் போராடி வரும் அவர்களை விடுதலை போராளிகள் என்று கூறுவேன்.
பாகிஸ்தானுக்கு இந்தியா ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இந்தியா மீது பாகிஸ்தானுக்கு எந்த அச்சமும் இல்லை. வெளிநாடுகளில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து நானோ எனது நாடோ பயந்ததில்லை.
இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மிகப் பெரிய ஜனநாயக நாடும், பழைமையான ஜனநாயக நாடும் நட்பாக இருப்பது பார்த்து நாங்கள் ஏன் பொறாமைபட வேண்டும்?
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தத்தை முதலில் அண்டை நாடுகளுடன் செய்து கொள்ள விரும்புகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications