For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதீபா பாட்டீலுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்!

By Staff
Google Oneindia Tamil News

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலை கொலை செய்யப்போவதாக இ-மெயில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டலை தொடர்ந்து பிரதீபா பாட்டீலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் 4 நாள் பயணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு நேற்று முன் தினம் சென்றார். இன்று மாலை இளையோர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் பிரதீபா பாட்டீலை கொலை செய்யப் போவதாக இ-மெயில் மூலம் மாநில அரசுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இ-மெயில் மிரட்டலில் மாறுவேடத்தில் வந்து பிரதீபா பாட்டீலை தாக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த மிரட்டலை தொடர்ந்து பிரதீபா பாட்டீலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X