ஜெட்-கிங்பிஷ்ஷர் கூட்டணி: தப்பிய முதலாளிகள்; மாட்டிக் கொண்ட பயணிகள்!

ஆனால் இன்று... கிங் பிஷர் லோகோவில் பறந்து கொண்டிருக்கிறது ஏர் டெக்கான்!.
ஜெட்டுக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் இப்போது. தன்னை இந்தியன் ஏர்லைன்சுக்கு இணையாக நினைத்துக் கொண்டிருந்த ஜெட்டுக்கு கடந்த இரு காலாண்டுகளில் ஏற்பட்ட கடும் நஷ்டம், பங்கு விலைச் சரிவு மற்றும் பயணிகளின் எண்ணிக்கைக் குறைவு பெரிய பாடங்களைக் கற்றுத் தந்துவிட்டது.
சர்வதேச அளவில் பெருகி வரும் நிதி நெருக்கடி காரணமாக பல விமானங்கள் 50 சதவிகித காலி இருக்கைகளுடன் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.
ஒரே வழித் தடத்தில் இப்படி காலி இருக்கைகளுடன் இரு வேறு விமானங்களை இயக்குவதற்குப் பதில், கூட்டாக செயல்பட்டு ஒரே விமானத்தை இயக்கினால் மொத்தமாக லாபம் வரும். பின்னர் அதைச் சரி பாதியாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதுதான் மல்லையாவின் யோசனை. இதனை உடனே ஏற்றுக் கொண்டது ஜெட் நிறுவனம்.
விளைவு, நேற்று வரை கடும் தொழில் எதிரிகாளாக இருந்த விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனமும், ஜெட்டும் இன்று அண்ணன் தம்பிகளாக உறவாடுகின்றன.
திவாலாகாமல் தடுக்க...
பணியாளர்கள், நிர்வாகச் செலவு எல்லாமே பாதியாகக் குறைந்துவிட்டது இரு நிறுவனங்களுக்கும்.
இனி ஜெட் பைலட் கிங் பிஷ்ஷர் ஓட்டுவார். கிங்பிஷ்ஷர் அதிகாரி ஜெட் பயணிக்கு டிக்கெட் கிழிப்பார்... எல்லாம் சரிதான். இந்த ஒப்பந்த்தால் சாதாரண பயணிக்கு என்ன லாபம்?
'முற்றிலும் மேம்பட்ட சேவை, துல்லியமான நேரத்தில் புறப்பாடு... இவை இரண்டையும் வேறெந்த விமானத்தையும் விட எங்களால் இனி சிறப்பாகத் தர முடியும். இது போதாதா?' என்கிறார் மல்லையா.
தங்கள் நிறுவனம் திவாலாகாமல் தடுக்கவும், பங்குதாரர்களின் நலன் காக்கவும்தான் இந்த நடவடிக்கை என்று அறிவித்துள்ளார் ஜெட் நிறுவன நிர்வாக இயக்குநர் நரேஷ் கோயல்.
இவர்களது பார்வையில் சரிதான். ஆனால் பயணிகளுக்கு இந்தக் கூட்டணியால் லாபமில்லை... பெரும் கஷ்டம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
எப்படி?
பயணிகளுக்கு சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மாற்று விமானங்களே இருக்காது (அதானே மல்லையா பிளான்!). இவர்களின் விமானத்தில் இவர்கள் குறித்த தொகையைக் கொடுத்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம் வரும். இது எத்தனைப் பெரிய ஆபத்து? என்கிறார்கள்.
முன்பு ஏர்டெக்கான் குறைந்த கட்டணத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது கிங் பிஷருடன் இணைந்த பிறகு மற்ற விமானங்களில் வாங்குவதற்கு இணையான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எனவே இத்தகைய கூட்டணி பயணிகளுக்கு நஷ்டம், முதலாளிகளுக்கு லாபம் என்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் கூட்டணி அமைத்ததால் திவாலாகாமல் தப்பித்தன ஜெட்டும், கிங்பிஷரும். ஆனால், திவாலாகப் போகிறவர்கள் பயணிகள் தான்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications