தமிழகம்-புதுவையில் மழை தொடரும்

இலங்கையை ஒட்டி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரியை ஒட்டி நகர்ந்து வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் பரவி நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊட்டியில் நேற்று இரவு 8 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் காந்தல், புதுமந்து, கஸ்தூரிபாய் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 200 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு அபாயமும் நிலவுகிறது. அதே போல கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றாலை உற்பத்தி பாதிப்பு-மீண்டும் மின்வெட்டு
இந் நிலையில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டதால் 1,500 முதல் 2000 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படுள்ளது.
இதனால் தமிழகத்தில் மீண்டும் மின் வெட்டு தீவிரமாகியுள்ளது.
மழை தொடர்ந்தால் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கும். அப்போது தான் மின் வெட்டு குறையும்.












Click it and Unblock the Notifications