நேபாள முன்னாள் மன்னர் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
காத்மாண்டு: நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திரா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. கரன்ட் பில் கட்டாததால் இந்த நடவடிக்கையை நேபாள அரசு எடுத்துள்ளது.
ஞானேந்திராவும் அவரது உறவினர்களும் மின்சாரவாரியத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.7 கோடியே 70லட்சம் பாக்கி உள்ளது. இதை அடுத்த 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும். செலுத்தாவிட்டால் மின்சப்ளை துண்டிக்கப்படும் என்றும் மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மன்னரின் அதிகாரங்களை நாடாளுமன்றம் கடந்த மே மாதம் பறித்தது. அன்று முதல் மன்னரும், அவரது உறவினர்களும் மின்சார வாரியத்துக்கு மின்சார கட்டணம் செலுத்தவில்லை. இதற்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மின்சாரவாரியத்துக்கு கட்டணம் செலுத்தும்படி மன்னருக்கும், அவரது உறவினர்களுக்கும் தொடர்ந்து வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் விநியோகத்தை துண்டிக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சார கட்டண பாக்கியைக் கட்டாவிட்டால் மின்சப்ளையை துண்டிப்பது என்ற முடிவு கடந்த 17-ந்தேதி எடுக்கப்பட்டது.
ராணுவ தளபதிய பதவிக்கு முன்னாள் நக்சலைட்?
இதற்கிடையே, முன்னாள் மாவோயிஸ்ட் நக்சலைட் கமாண்டர் பசங்க் என்பவரை, ராணுவ தலைமைத் தளபதியாக நியமிக்க மாவோயிஸ்ட் கட்சி முயல்வதாக நேபாள காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பசங்க் உள்ளிட்ட ராணுவத்தில் இடம் பெறாத யாரையும் சீனாவுக்கு ராணுவப் பயிற்சிக்காக அனுப்பக் கூடாது என நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேபாள அரசை வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து நேபாள நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் கொறடா ஷோபாகர் பரஜாலி கூறுகையில், பசங்க்கை ராணுவ தலைமைத் தளபதியாக நியமிக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதுதொடர்பாக மாவோயிஸ்ட் கட்சியினர் சதி செய்து வருகின்றனர். பசங்க்கை எப்படியாவது தளபதியாக்கி விட அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது என்றார் அவர்..
சீனாவில் ராணுவப் பயிற்சி பெற மாவோயிஸ்ட் அரசு நான்கு பேரை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர்தான் பசங்க். 9 மாத கால பயிற்சி இது. இந்தப் பயிற்சி முடித்தவர்கள்தான் ராணுவத் தளபதி பதவிக்கு தகுதி பெற முடியும் என்பதால் பசங்க் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications