கோவையில் திமுகவுக்கு எதிராக காங் போஸ்டர்
கோவை: மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை கடுமையாக விமர்சித்து கோவையில் காங்கிரஸார் ஒட்டிய போஸ்டர்களால் திமுகவினர் கோபமடைந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த அன்னை இந்திரா தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் ஊட்டியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், திமுக அமைச்சர்களை கிண்டல் செய்யும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில், 'சோனியாவிடம் பதவி வாங்கலாம்; முதல்வரிடம் அரிசி வாங்கலாம்; ஸ்டாலினிடம் டிவி வாங்கலாம்; ஆனால், ஆற்காடு வீராசாமியிடம் மின்சாரம் வாங்க முடியுமா?' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்களுக்கு கீழ், அன்னை இந்திரா தேசிய காங்கிரஸ்- கோவை என எழுதப்பட்டு சில மொபைல் போன் எண்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டரால் திமுகவினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இது கோவை காங்கிரஸைச் சேர்ந்த ஒரு கோஷ்டியினரின் குசும்புத்தனம். காங்கிரஸார் மற்றும் திமுகவினரிடையே பிளவை ஏற்படுத்தும் முயர்சி என காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதிமுக ஆதரவு காங்கிரஸார்தான் இதை செய்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications