7-ம் தேதி முதல் கிண்டி ரேஸ்!
சென்னை: மெட்ராஸ் ரேஸ் கிளப் நடத்தும் குதிரைப் பந்தயம், சென்னையில் 7-ம் தொடங்குகிறது.
இதுகுறித்து ரேஸ் கிளப் செயலாளர் அமானுல்லா கான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான குதிரைப்பந்தயம் நவம்பர் 7ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. 42 நாட்களில் மொத்தம் 258 பந்தயங்கள் இதில் இடம்பெறுள்ளன. இதில் 87 பந்தயங்களுக்கு கோப்பை வழங்கப்படும்.
மொத்த பரிசு தொகை ரூ.9 கோடியே 72 லட்சத்து 33 ஆயிரம். பந்தயத்தில் 600 குதிரைகளும், 120 குட்டி குதிரைகளும், 14 பயிற்சியாளர் மற்றும் 50 சாரதிகளும் பங்கு பெறுகின்றனர்.
மைசூர், ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா ஆகிய மாநிலங்களை சேர்ந்த புகழ்பெற்ற குதிரைகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன.
ரேஸ் பிரியர்களின் வசதிக்காக ஜாக்பாட், ட்ரிபிள் வின், பிளேஸ், தனாலா போன்ற டிக்கெட்டுகள் காலை 9 மணியிலிருந்து மாலை வரை விற்கப்பட்ம், என்றார் அமானுல்லா கான்.












Click it and Unblock the Notifications