துப்பாக்கித் தோட்டாக்களுடன் வந்த கல்லூரி முதல்வர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருப்பவர் டாக்டர் குமார். இவர் மதுரை செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த சூட்கேஸை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சூட்கேஸில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன.
இதையடுத்து அவர் நிறுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, தன்னிடம் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முடியாது என்று கூறிய மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பின்னர் பயணம் செய்ய அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications