தூத்துக்குடி-சர்ச் கட்டடம் இடிந்து 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஏரல்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே புதுப்பித்துக் கட்டப்பட்டு வந்த சர்ச் இடிந்து விழு்நததில் 4 பேர் பலியானார்கள்.

தூததுக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் ஞானப்பிரகாசியர் பட்டணம் என்ற கிறிஸ்தவ ஆர்சி தேவாலயம் உள்ளது.

இந்த கோயிலின் பங்கு கிளை ஆலயமான புனித சுவாமி நாதர் ஆலாயம் செபத்தையாபுரத்தில் உள்ளது. இந்த ஆலயம் 1947ல் கட்டப்பட்டது. பழமையான இந்த கிருஸ்தவ ஆலயத்தை புதுப்பித்து கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆலயத்தை புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.

ஆலய கட்டிடத்தில் கான்கிரிட் போடும் பணி நேற்று நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மாலையில் வேலை நிறைவுபெறும் வேளையில் திடீரென சுமார் 25 அடி உயர கான்கீரிட் தளம் இடிந்து விழுந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கல் ஓட்டம் பிடித்தனர். ஆனால் கட்டிடத்தின் உள்பகுதியில் 4 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். கட்டிடத்தின் மேல் நின்றவர்கள் லேசான மற்றும் பலத்த காயத்துடன் தப்பி விட்டனர்.

கான்கீரிட் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட ஏரலை சேர்ந்த மகாராஜன், கூட்டம்புளியை சேர்ந்த முத்து, சேர்வைக்காரன் மடத்தை சேர்ந்த கிருஷ்ணன் சிவஞானபுரத்தை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+