வேலை இழப்பைத் தடுக்க முடியாத பிரதமரின் நிதிச் சலுகைகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் அளித்துள்ள 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச் சலுகைகள் மற்றும் கடன் உதவிகளாலும் கூட இந்திய நிறுவனங்களில் துவங்கியுள்ள வேலை நீக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அடுத்த மூன்றே மாதங்களில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் 10 முதல் 30 சதவிகிதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 200- சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எப்ஐசிசிஐ.

குறிப்பாக ஜவுளித்துறை, உலோகம், தோல் பொருள் உற்பத்தி மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் 50 சதவிகிதம் வரை வேலை நீக்கம் உறுதி என அபாய மணி அடித்துள்ளது இந்த அமைப்பு. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நிறுத்துவதைத் தவிர நிறுவனங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

காரணம் ஜவுளி மற்றும் தோல் பொருள் உற்பத்தித் துறையில் கடந்த செப்டம்பர் மாத்ததிலிருந்து பெரும் நஷ்டம் நிலவுவதாகவும், இன்னும் சில ஆண்டுகளுக்கு இதனைச் சரி செய்ய முடியாது என்றும் எப்ஐசிசிஐ கூறியுள்ளது.

அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதியும் 60 சதவிகிதம் வரை குறைந்து விட்டதால், அந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட உற்பத்தி குறைப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளை பெருமளவு குறைப்பதில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்கிறது எப்ஐசிசிஐ.

பிரதமர் ரூ.75 ஆயிரம் கோடிக்கும் மேல் பல பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், இன்னும் கூட வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் 8 முதல் 10 சதவிகிதமாகவே உள்ளதால் கடன் சுமையும் குறையாமல் இருப்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் புகார் கூறியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+