மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வ தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்குகிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை தமிழக அரசின் தேர்வுகள் இயக்குநரகம் இன்று அறிவித்தது.
தேர்வுகள் இயக்குநரக இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவித்தார்.
அதன்படி 2009ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. மார்ச் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வை கிட்டத்தட்ட 6 லட்சம் பேரும், பத்தாம் வகுப்புத் தேர்வை 10 லட்சம் பேரும் எழுதவிருப்பதாக வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications