சத்யம்: மிரள வைக்கும் புதுப்புது மோசடிகள்!

இந்த ரூ. 7,800 கோடி மோசடி தவிர, பினாமி கணக்குகள் மூலம் மட்டும் ராஜு வெளிநாட்டுக்குக் கடத்தியுள்ள பணம் ரூ.2,800 கோடிக்கும் அதிகம் என்கிறது முதல்கட்ட புலானாய்வு விசாரணை. மேலும் 3,800 கோடி ரூபாய் டெபாஸிட்டுகளையும் 'காணவில்லை'யாம்!
இந்த மோசடியில் சுமார் ரூ. 1,840 கோடி அளவுக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் மட்டுமே போலியான நபர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது எல்லாமே போலிக் கணக்குகள். அனுப்பப்பட்ட பணம் மட்டும் நிஜம். இதுதான் ராஜுவின் டெக்னிக்.
வெளிநாடுகளில் தனது க்ளையண்டுகளாகவும், ஏஜென்ஸிகளாகவும் நூற்றுக்கணக்கான போலி நிறுவனங்களை உருவாக்கி, அவர்களுக்கு சத்யம் நிறுவனத்தின் பணத்தை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார் ராஜூ.
இந்தத் தொகைதான் ரூ.1800 கோடியைத் தாண்டுகிறது. இந்தப் பணம் முழுவதும் பேங்க் ஆப் பரோடா வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ராஜு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சொல்கின்றன.
டெபாசிட்டுகள் எங்கே?:
சத்யம் நிறுவனத்தின் பல்வேறு டெபாஸிட்டுகளாக ரூ.3,800 கோடியும், நடப்புக் கணக்கில் ரொக்கமாக ரூ.1,300 கோடியும் இருப்பதாக சத்யம் கணக்குகள் காட்டுகின்றன. ஆனால் இந்த தொகை டெபாஸிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜு குறிப்பிட்டிருக்கும் வங்கிகள், 'டெபாஸிட்டா... அப்படீன்னா...?' என்கிற ரீதியில் திருப்பிக் கேட்கத் தொடங்கியுள்ளன.
உதாரணத்துக்கு ஐசிஐசிஐ வங்கியில் ரூ.1,000 கோடி சத்யம் கணக்கில் இருப்பதாக சத்யம் கணக்கு ஏடுகள் தெரிவிக்கின்றன. இதற்கான வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான வரி கட்டிய ரசீது எல்லாமே பக்காவாக உள்ளன. ஆனால் ஐசிஐசிஐ வங்கியோ, அப்படி ஒரு கணக்கே சத்யம் நிறுவனத்துக்கு தங்கள் வங்கியில் இல்லை என நேற்று அறிவித்துவிட்டது.
அப்படியெனில் இந்த ஆவணங்கள், அதிலுள்ள வங்கி அதிகாரிகள் கையெழுத்து, வருமான வரி கட்டப்பட்டது... இந்த சந்தேகங்கள் விசாரணை அதிகரிகளை திக்பிரமை கொள்ள வைத்துள்ளன.
இன்னும் இப்படி ஏராளமான மோசடிக் கணக்குகள் அம்பலத்துக்கு வரவிருப்பதாகத் தெரிவிக்கின்றன புலனாய்வு ஏஜென்ஸிகள்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications