இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 17 இலங்கை மீனவர்கள் கைது
சென்னை: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 17 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டது.
இந்திய கடலோர காவல் காவல்படைக்கு சொந்தமான சாகர் கப்பல், நேற்று இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அதற்கு உதவியாக, இந்திய கடற்படையின் விமானமும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.
அப்போது இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி 3 மர்ம படகுகள் நுழைந்ததை அவை பார்த்து விட்டன. இதையடுத்து உடனடியாக அந்த படகுகளை இந்திய கடலோர காவல் படையினர் முற்றுகையிட்டனர்.
பின்னர் 3 படகுகளையும் பிடித்தனர். 3 படகுகளிலும் 17 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் சிங்கள மீனவர்கள் என்பது தெரியவந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த மீன்களும் கைப்பற்றப்பட்டது.
அவர்கள் வந்த வத்சோம்', புஷ்ரஜ்னி', சிங்களா' என்ற பெயருடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், கைதான சிங்கள மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படை கப்பலில் ஏற்றி, சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்.
இன்று அவர்கள் காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications