நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டி மக்கள் போராட்டம் !
பழனி: பழனியில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டி பொது மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்ககளில் பழனியும் ஒன்று. இங்குள்ள முருகன் கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்களும் வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடும்.
இங்கு வரும் மக்கள் தாங்களது குப்பைகளை அப்படியே வீசியேறிந்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நகரகத்தின் பல பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று அனைத்து கட்சியினரும், பொது நல அமைப்பைச் சேர்ந்த பலரும் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் தங்கள் எதிர்பப்பை தெரிவிக்கும் வகையில் தெருவில் உள்ள குப்பைகளை வண்டி ஒன்றில் அள்ளி வந்து நகராட்சி அலுவலகம் முன்பு கொட்டி திடீர் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த பழனி நகராட்சி கமிஷனர், நகராட்சி அலுவகம் வந்து நாற்றம் வீசும் குப்பைகளை பார்வையிட்டார். பின்பு நகராட்சி அலுவலகம் முன்பு குப்பைகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகராட்சி அலுவலம் முன்பு குப்பைகளை கொட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.