எல்டிடிஇ-க்கு உதவுவதாக புகார் - தமிழ் அமைப்புக்கு அமெரிக்கா தடை
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து தமிழ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலக இயக்குநர் ஆடம் ஸூபின் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அவை போன்ற பிற அமைப்புகள், இதுபோன்ற அறக்கட்டளைகளை தங்களது நிதித் தேவைக்காக நம்பியுள்ளன. இவர்கள் மூலம் நிதியை வசூலித்து தங்களது வன்முறைச் செயலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற அறக்கட்டளைகளுக்குப் பின்னால் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்கள் மீது நாங்கள் கூடுதல் கண்காணிப்பு செலுத்துகிறோம். பெயரை மாற்றியோ, வேறு ரூபத்திலோ அவர்கள் செயல்படாமல் தடுப்போம் என்றார்.
ஏற்கனவே அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட தமிழர் மறு சீரமைப்புக் கழகத்தின் தலைவராக இருப்பவர்தான், தமிழ் பவுண்டேஷன் அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் மறு சீரமைப்புக் கழகம் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தடை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications