சத்தியமூர்த்தி பவன் அருகே பேனர்களுக்கு தீவைப்பு - பதட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அருகே காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த 3 பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மாலை மயிலாப்பூர் மாங்கொல்லைப் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசவுள்ளார்.
இதுதொடர்பாக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சத்தியமூர்த்தி பவன் அருகே பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
சத்தியமூர்த்தி பவன் - மணிக்கூண்டு சந்திப்பில் 3 பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனர்களை நள்ளிரவில் சில விஷமிகள் தீவைத்து எரித்து விட்டனர். மேலும், சத்தியமூர்த்தி பவன் எதிரே கட்டப்பட்டிருந்த இரு பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications