விசாரணைக்காக கஸாபை ஒப்படையுங்கள் - பாக்.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி கஸாப் கைது செய்யப்பட்டான். அவனது வாக்குமூலத்தில் இருந்து மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளே காரணம் என்பது உறுதியானது.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்தது. இந்தியா தேடி வரும் குற்றவாளிகளை பாகிஸ்தான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கேட்டது.
இந்நிலையில் தங்களுக்கு மும்பை தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி வந்த பாகிஸ்தான் சமீபத்தில் சதி திட்டம் தங்கள் நாட்டில் தான் தீட்டப்பட்டது என்பதை முதன் முறையாக ஒப்புக்கொண்டது.
இதையடுத்து இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமது அஜ்மல் கஸாப் உட்பட 9 பேர் மீது பாகிஸ்தான் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் கூறுகையில்,
கஸாப் பெயரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் கருதினால், அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.
ஆனால், தற்போது இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. கஸாபை அழைத்து வருமாறு பாகிஸ்தான் கோர்ட்டு பரிந்துரைத்தால் அதை ஏற்றுக் கொண்டு கண்டிப்பாக அவரை அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என்றார் மாலிக்.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications