கோவை சிறையில் கைதிகள் - வார்டன்கள் பயங்கர மோதல் - 8 பேர் படுகாயம்
கோவை: கோவை மத்திய சிறைக்குள் கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் மூண்டது. இதில் 3 வார்டன்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை காந்திபுரம் பஸ்நிலையம் அருகே மத்திய சிறைச்சாலை உள்ளது. இன்று சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கும், வார்டன்களுக்கும் இடையே திடீரென பயங்கர மோதல் மூண்டது.
உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தினர். அதன் பின்னரே கைதிகளிடம் இருந்து 3 வார்டன்கள் மீட்கப்பட்டனர்.
உடனடியாக அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வார்டன்கள் தாக்கியதில் கைதிகள் கணேஷ், சங்கர் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிறை வளாகத்தில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறைக்குள் பதட்டம் நீடிப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications