ஆழியாறு: கேரளாவுக்கு தமிழகம் கூடுதல் தண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரம்பிகுளம்-ஆழியாறு அணையிலிருந்து வரும் 15ம் தேதி கேரளாவுக்கு 0.2 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

பரம்பிகுளம்-ஆழியாறு அணை திட்டத்தின்படி தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் கேரளாவுக்கு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 7.25 டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்காக வழங்கிவருகிறது.

தற்போது இந்த திட்டத்தால் பயன்பெறும் கேரள பகுதிகளில் விவசாயிகள் வேலையை ஆரம்பித்துள்ளனர். இந்தாண்டு கேரளாவில் பருவமழை தவறியதால் கூடுதல் தண்ணீர் தரும்படியும், வறட்சியால் பயிர்கள் வாடுவதாகவும் கூறி வருகிறது.

இதுதொடர்பாக, இரு மாநில அமைச்சர்களும் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து கேரளா பாசனத் துறை செயலாளர் குணவர்தன், தலைமை பொறியாளர் லதிகா உட்பட சில அதிகாரிகள் நேற்று காலை சென்னை வந்து தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் முடிவில் கேரளத்துக்கு கூடுதலாக 0.2 டி.எம்.சி. தண்ணீரை அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து, பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,

கேரளாவுக்கு 0.2 டிஎம்சி தண்ணீர் வழங்க தமிழ அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டது. ஆனால், இதை சற்று முன்னதாக வழங்கும் படி வலியுறுத்தியது. இதையடுத்து வரும் 15ம் தேதி பரம்பிகுளம் - ஆழியாறு அணையிலிருந்து தண்ணீரை தமிழகம் வழங்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+