பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது
Subscribe to Oneindia Tamil

சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லி்ல் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கொளத்தூர் மணி, இந்திய இறையாண்மைக்கும், சட்டங்களுக்கும் விரோதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று மேட்டூர் சென்ற திண்டுக்கல் போலீஸார், கொளத்தூர் மணியை அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்து திண்டுக்கல் கொண்டு வந்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கொளத்தூர் மணி சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications