மே 15 வரை மின்வெட்டு: ஆற்காடு வீராசாமி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கோடைகாலத்தில் மின்வெட்டு இருக்கும். மே மாதம் 15ம் தேதிக்குப் பிறகு, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும். அதன்பின், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டில் இருந்து விலக்கு தரப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
மே மாதம் 15ம் தேதி வரை... தமிழகத்தில் ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை நிலவுகிறது. மே மாதம் 15ம் தேதிக்குப் பிறகு, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கும். அதன்பின், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டில் இருந்து விலக்கு தரப்படும்.
மின் தட்டுப்பாடு காரணமாக, கோடை காலத்திலும் மின் வெட்டு இருக்கும். தற்போது, வெளி மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 7 முதல் 8 வரை விலைக்கு வாங்கப்படுகிறது. கோடை காலத்தில் மின்சாரத்துக்கு கிராக்கி ஏற்படுவதால், வட மாநிலங்கள் அதை அதிக விலைக்கு விற்கின்றன.
ஒரு யூனிட்டுக்கு ரூ. 9 வரை கேட்கிறார்கள். ஆனாலும், கோடையில் மின் வெட்டு இல்லாமல் செய்ய 500 மெகா வாட் மின்சாரத்தை வட மாநிலங்களில் இருந்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கம்பிகளில் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதன் மூலம், 18 சதவீதம் மின் இழப்பு ஏற்படுகிறது. இதைக் குறைக்க மத்திய அரசு மூலம் தனியான திட்டத்தை செயல்படுத்த மின்சார வாரியம் கடிதம் எழுதியது. அதன்படி, 650 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க உள்ளது. இம்மாதம் அல்லது ஏப்ரலில் இந்த நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தை தனித் தனி கம்பிகளில் கொடுப்பதன் மூலம், மின் இழப்பை 18 லிருந்து 15 சதவீதமாகக் குறைக்க முடியும். திருநெல்வேலி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் இந்தப் பணி தொடங்கும் என்றார் ஆர்க்காடு.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications