ஈழத் தமிழர்களுக்கு பாத்திரம், உணவுப் பொருட்கள் அனுப்ப கருணாநிதி உத்தரவு
சென்னை: இலங்கையில் போர் பாதிப்புக்குள்ளாகியுள்ள 40 ஆயிரம் தமிழர்கள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும், பாத்திரங்களையும் அனுப்ப முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதி அக்டோபர் மாத இறுதியில் திரட்டத் தொடங்கிய நிவாரண நிதியில் மொத்தமாக 50 கோடியே 53 லட்ச ரூபாய் சேர்ந்து அது அரசு கணக்கிலே வரவாக வைக்கப்பட்டது.
அந்தத் தொகையிலிருந்து இதுவரை 10 கோடியே 7 லட்சம் ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் இந்திய அரசின் அனுமதியோடு இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழு மூலமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டது.
2-வது கட்ட உதவி
தற்போது, இலங்கையில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாற்பதாயிரம் தமிழ்க் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உடனடியாகத் தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளதால் - முதல்-அமைச்சர் கருணாநிதி அதற்கான ஏற்பாடுகளை செய்து அவைகளை அனுப்பிவைக்குமாறு பிறப்பித்த ஆணைக்கிணங்க -
அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களுடன், குளிப்பதற்கான சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை ஆகிய பொருட்கள் மற்றும் சமையல் செய்வதற்கான எவர்சில்வர் பாத்திரங்கள் ஆகியவற்றை - நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில் தனித்தனியே சிப்பங்களாக தயார் செய்து விரைவில் அனுப்பப்படவுள்ளன.
இந்தப் பொருட்கள் இந்திய அரசின் அனுமதியுடன் இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு, முறையாக பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும்.
அந்தக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சமையல் பாத்திரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி 14.3.2009 அன்று பார்வையிட்டு தேர்வு செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications