20ம் தேதி சென்னை வரும் பிரதீபா பாட்டீல்
சென்னை: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வருகிற 20ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை பரங்கிமலையில் ராணுவ பயிற்சி அகாடமி (Officers training Acadamy) உள்ளது. இங்கு பயிற்சி பெற்று வரும் ராணுவ அதிகாரிகளின் நிறைவு விழா 21ம் தேதி நடைபெறுகிறது.
மொத்தம் 155 பேர் பயிற்சி முடித்து வருகின்றனர். அவர்களில் 40 பேர் பெண்கள் ஆவர்.
இந்த விழாவில் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்கிறார். இதற்காக 20ம் தேதி இரவு அவர் சென்னை வருகிறார். இரவு ஆளுநர் மாளிகையி்ல் அவர் தங்குகிறார்.
அடுத்த நாள் காலை ஆறரை மணிக்கு அவர் கிளம்பி, ஆறே முக்கால் மணிக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி விழாவில் கலந்து கொள்கிறார்.
அங்கு உரையாற்றும் பிரதீபா பாட்டீல், ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை அவர் கண்டு ரசிக்கிறார். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளையும் பிரதீபா பட்டீல் வழங்கி கெளரவிக்கிறார்.












Click it and Unblock the Notifications