அதிமுகவில் மரியாதை இல்லை - திமுகவில் இணைகிறேன்: ராதாரவி

Subscribe to Oneindia Tamil

Radha Ravi
சென்னை: முதல்வர் கருணாநிதைய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், நடிகருமான ராதாரவி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். விரைவில் திமுகவில் சேரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு வந்த ராதாரவி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் வெளியில் வந்த அவர் இதை திமுகவில் சேருவதற்கான முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளலாமா என்று நிருபர்கள் கேட்டபோது, எடுத்துக் கொள்ளலாம். விரைவில் திமுகவில் சேருவேன் என்றார் ராதாரவி.

தொடர்ந்து அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்த போது பார்க்க முடியவில்லை. அதனால் இப்போது வந்து நலம் விசாரித்தேன். என்னுடைய தாயார் மறைந்த போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட என்னை போனில் தொடர்பு கொண்டு தூக்கம் விசாரித்த மனிதாபிமானம் மிக்கவர் அவர். அந்த அடிப்படையில் அவரை இன்று சந்தித்தேன்.

கடந்த பல மாதங்களாக அ.தி.மு.க.வில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். அ.தி.மு.க. மேடைகளில் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.

இது மட்டுமல்லாமல் என்னுடைய தாயார் இறந்த போது சிறு இரங்கல் கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. எனது நெருங்கிய நண்பர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூட எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாத படி செய்து விட்டார்கள். இது போன்ற பல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற முடிவு செய்து இருக்கிறேன்.

அதிமுகவில் தொண்டர்கள் மரியாதை கொடுத்தார்கள். தலைமை கொடுக்கவில்லை. அ.தி.மு.க.வில் தலைமைக்கு எடுத்து சொல்ல ஆள் இல்லை.

அ.தி.மு.க.வில் தகுதியானவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். அந்த அடிப்படையில் இன்னும் நிறைய பேர் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவார்கள் என்றார் ராதாரவி.

எப்போது திமுகவில் இணைவீர்கள் என்ற கேள்விக்கு விரைவில் என்ற ராதாரவி, தி.மு.க.வில் சேரும் போதே பதவியை எதிர்பார்த்து சேரவில்லை. இங்கேயும் அப்படி தான் என்றார். கண்டிப்பாக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.

திமுகவில் நீண்ட காலமாக இருந்தவர் ராதாரவி. இருப்பினும் எம்.எல்.ஏ உள்பட எந்த வாய்ப்பும் அவருக்குக் கிட்டவில்லை. இந்த நிலையில் அவரும், எஸ்.எஸ்.சந்திரனும் திமுகவிலிருந்ரு அதிமுகவில் இணைந்த பின்னர் ராதாரவி சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அதேபோல எஸ்.எஸ்.சந்திரன் ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டார்.

தற்போது இருவரும் அதிமுகவில் முன்பு போல ஆக்கப்பூர்வமாக இருப்பதாக தெரியவில்லை. எனவே ராதாரவியைப் பின்பற்றி சந்திரனும் வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+