புதுச்சேரி பிரஞ்சு நிறுவன பன்னாட்டுக் கருத்தரங்கு
புதுச்சேரி பிரஞ்சு நிறுவனமும் சென்னை செம்மொழி நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழில் வாசிப்புப் பண்பாடும் பதிப்பு மரபும் என்ற பொருளில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினைப் புதுச்சேரியில் நடத்துகிறது.
இந்த மாநாடு நேற்று 25.03.09 தொடங்கி நாளை 27.03.09 வரை மூன்று நாள் நடைபெறுகிறது.இக்கருத்தரங்கில் தமிழ் நூல்கள் எவ்வாறு படிக்கப்படுகின்றன, தொகுக்கப்படுகின்றன, பதிப்பிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆராயப்படுகின்றன.
அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் பெர்னாடு பேட்(ஏல் பல்கலைக்கழகம்), பிரான்சிலிருந்து பிரான்சுவா குரோ, ஜெர்மனியிலிருந்து தாமசு லேமான், இலங்கையிலிருந்து ஜெய்சங்கர்
உள்ளிட்டவர்களும்
தமிழகத்திலிருந்து பேராசிரியர் இரா.கோதண்டராமன், பேராசிரியர் சுப்பிரமணியன், முனைவர் இந்திரா மானுவல், முனைவர் முருகரத்தினம், ஞானாலயா கிருட்டினமூர்த்தி (புதுக்கோட்டை) சுப்பராயலு, உரோசா முத்தையா நூலகத்திலிருந்து ஆய்வறிஞர்களும் கலந்துகொள்கின்றனர்.பல பல்கலைக்கழகங்களிலிருந்து ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications