நாளை முதல் திமுக நேர்காணல்-3ம் தேதி வேட்பாளர் பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் நேர்காணல் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு நடக்கும் என கூறப்பட்டிருந்தது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி மற்றும் திமுக பொது செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் இந்த நேர்காணல் நடக்க இருக்கிறது.
இந்நிலையி்ல் அன்பழகன் கூறுகையில்,
நேர்காணலை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இரண்டு நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம் இதையடுத்து நாளை துவங்கி வரும் 6ம் தேதி வரை நடக்கும் என கூறப்பட்ட நேர்காணல் 3ம் தேதியுடன் முடிகிறது என்றார்.
இதையடுத்து நாளை 10 தொகுதிகளுக்கும், 3ம் தேதி 11 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தப்படும் என தெரிகிறது.
மாற்றப்பட்ட திமுக வேட்பாளர்களின் நேர்காணல் விபரம்:
நாளை காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, ஸ்ரீபெரும்பூதூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும், மாலையில் மத்திய சென்னை, கரூர், பெரம்பலூர், அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய 5 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது.
நாளை மறுநாள் காலையில் நீலகிரி (தனி), பொள்ளாச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும், மாலையில் மீதமுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, வடசென்னை, தென்சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 6 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது.
நேர்காணலுக்கு பின் வெள்ளிக்கிழமையே திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications