நாகையில் மீண்டும் ஏ.கே.எஸ்.விஜயன் - 3வது முறை எம்.பி. ஆவாரா
Subscribe to Oneindia Tamil

48 வயதாகும் விஜயனின் தொழில் விவசாயம். இவரது தந்தை சுப்பையா முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆவார்.
1991ம் ஆண்டு ஒன்றியத் துணைச் செயலாளராக, ஒன்றியச் செயலாளராக இருந்தார். 2004ம் ஆண்டு நாகப்பட்டனம் மாவட்ட திமுக செயலாளராக நிறுத்தப்பட்டார். 1999ம் ஆண்டு முதல் நாகை தொகுதியின் எம்.பியாக உள்ளார்.
3வது முறையாக எம்.பியாக காத்திருக்கும் விஜயன், மக்களிடையே நல்ல பெயர் பெற்றவர். இடதுசாரிகள் ஆதிக்கம் உள்ள இந்தத் தொகுதியில் அவர்களை சமாளிக்கும் திறனும் மக்கள் செல்வாக்கும் கொண்ட வேட்பாளர் என்பதால் இவர் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு முன்பே முடிவாகிவிட்டது.
மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியவர்.












Click it and Unblock the Notifications