பிருத்வி ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலசோர்: இந்தியாவின் நடுத்தர ரக தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை படைத்த பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூர் அருகே கடலில் உள்ள ஒருங்கிணைந்து ஏவுகணை சோதனை மையத்தி்ல் இந்த சோதனை நடைபெற்றது.
டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
200 முதல் 250 கிலோமீட்டர் தூரம் வரையிலான இலக்கை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது பிருத்வி ஏவுகணை. எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் முடியும் என்பது முக்கியமானது.












Click it and Unblock the Notifications