அப்படி பேச மாட்டேன்-கோர்ட்டில் உறுதியளித்த வருண்
எடா (உ.பி): உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இனிமேல் துவேஷத்தைத் தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று உ.பி. கோர்ட்டில் வருண் காந்தி உறுதிமொழி அளித்துள்ளார்.
பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் வருண் காந்தி.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை செல்லாது என அறிவிக்கக் கோரியும் அவர் சுப்ரீம் கோர்ட்டி்ல மனு செய்துள்ளார்.
அவரது ஜாமீன் கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதி்மன்றம், இனிமேல் இதுபோல துவேஷமாக பேச மாட்டேன் என வருண் காந்தி உத்தரவாதம் அளித்தால் ஜாமீன் தருவது குறித்து பரிசீலிக்க முடியும் என அறிவுறுத்தியது.
இதற்கு வருண் காந்தி ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து வருண் காந்தியின் உத்தரவாதம் அடங்கிய மனு, எடா மாவட்ட நீதிபதி கெளரவ் தயாளிடம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளார். வருகிற 16ம் தேதி வருணின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது அவர் அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கும் எனத் தெரிகிறது.
வருண் காந்தி தனது உத்தரவாதப் பத்திரத்தில், இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக இனி எதையும் பேச மாட்டேன். நடத்தை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என உறுதியளித்துள்ளதாக அவரது வக்கீல் பிரசாந்த் சிங் அடல் கூறியுள்ளார்.
இன்று வருண் காந்தியை அவரது சித்தி அம்பிகா சுக்லா எடா சிறைக்குச் சென்று பார்த்தார்.
-
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு!












Click it and Unblock the Notifications