இந்தியா உதவாவிட்டாலும் கூட தனி ஈழம் அமைவது உறுதி - நெடுமாறன்
ஈரோடு: தனி ஈழம் அமைவது உறுதி. இந்தியா உதவினாலும், உதவாவிட்டாலும் ஈழம் அமைவது உறுதி என்று கூறியுள்ளார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்றுதான் இலங்கை அரசு கூறி உள்ளது. ஆனால், கருணாநிதியும், ப.சிதம்பரமும் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என்று தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைந்து விடக் கூடாது என்று இந்திய அரசு உறுதியாக உள்ளது. அங்கு பின்னால் நின்று போரை நடத்துவதே இந்திய அரசுதான்.
அதுபோல் சர்வதேச பத்திரிகையாளர்களை இலங்கை அரசு போர் நடக்கும் பகுதிகளுக்கு அனுமதிப்பதே இல்லை. ராணுவ அதிகாரிகள் தணிக்கை செய்த செய்திகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
எனவே இலங்கை அரசு கூறும் தவறான தகவல்கள்தான் பத்திரிகைகளில் வெளி வருகின்றன. தமிழர்களுக்கு, சிங்களர்களுக்கு இணையான சம அந்தஸ்து வேண்டும். அதற்கு தனி ஈழம் அமைவதை தவிர வேறு வழி இல்லை. இந்திய அரசு உதவவில்லை என்றாலும், தனி ஈழம் அமைந்தே தீரும்.
நான் பொதுக்கூட்டத்தில் பேசினால், சட்டம்-ஒழுங்கு கெடும் என்ற காரணத்தை சொல்லி ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் பொதுக்கூட்டங்களுக்கு போலீசார் தடை விதித்து உள்ளார்கள்.
தேர்தலில் நிச்சயம் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில் கருணாநிதி எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்க முயற்சி செய்கிறார்.
ஏற்கனவே பல்வேறு அமைப்புகள், ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளியிட்ட குறுந்தகடுகளை போலீசார் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். பலர் மீது வழக்குகள் போடப்பட்டு உள்ளது. ப.சிதம்பரம் தொகுதியில், அவருக்கு எதிராக பிரசாரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. இவை குறித்து தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவிடம் புகார் செய்து இருக்கிறோம் என்றார் நெடுமாறன்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications