சென்னையி்ல் சோனியாவுக்கு கருப்பு கொடி-நெடுமாறன்
சென்னை: நாளை சென்னை வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இதில் இயக்குநர் பாரதிராஜாவும் கலந்து கொள்கிறார் என்று கூறியுள்ளார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.
இதுதொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த 8 மாத காலத்தில் 7 ஆயிரம் தமிழர்கள் சிங்கள ராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்தின்றி காடுகளிலும், சாலையோரங்களிலும் தவிக்கின்றனர். போரை நிறுத்த வேண்டும். அப்பாவி தமிழ் மக்களை காக்க வேண்டும் என ஆறரை கோடி தமிழர்கள் ஒன்றுபட்டு பல போராட்டங்கள் நடத்தியும் இந்திய அரசு எதுவும் செய்யவில்லை. மாறாக, சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி, நிதியுதவி வழங்கி தமிழர் கொலைக்கு துணை செய்தது, செய்து வருகிறது.
இந்திய அரசின் வழிகாட்டும் குழுவின் தலைவரான சோனியாகாந்தி ராஜபக்சேவின் கொலை வெறியைக் கண்டிக்கவில்லை. ஈழத்தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத சோனியாகாந்தி தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் தமிழகம் வருகிறார்.
கருப்புக் கொடிகள் பறக்கட்டும் ...
அவருக்கு நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் சகல ஊர்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்கப்பட வேண்டும். தமிழர்கள் கறுப்புச் சின்னம் குத்திக் கொள்ள வேண்டும்.
சென்னையில் சோனியா காந்திக்கு எதிராக நடத்தப்படும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் நானும், இயக்குனர் பாரதிராஜா மற்றும் பல தலைவர்கள் பங்கேற்கிறோம்.
தமிழர்களின் கொதிப்புணர்வை வெளிபடுத்த இருக்கும் இப்போராட்டத்தில் கட்டுப்பாடாகவும், அமைதிக்கு பங்கம் நேராத வகையிலும் கலந்து கொள்ளும்படி தமிழர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன் என்று கோரியுள்ளார் நெடுமாறன்.
15 மணி நேரத்தி்ல 2000 தமிழர்கள் பலி..
இதற்கிடையே, பழ. நெடுமாறன் அளித்துள்ள ஒரு பேட்டியில், இலங்கையில் 15 மணி நேரத்தில் மட்டும் 2000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால், ஒற்றைப்பனையடி, வளையார்குண்டு, இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளில் இந்தப் படுகொலைகள் நடந்துள்ளன.
தமிழர் பகுதிகள் எங்கும் உடல்களாக கிடக்கின்றன. போர் முனையில் உணவு, மருந்து இல்லாமல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
ஐ.நா. சபை உடனடியாக தலையிட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான மருந்துகளை அளிக்க வேண்டும்.
போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாக இந்திய அரசும், ப.சிதம்பரமும் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காராவோ, கனரக ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தவில்லை என்கிறார்.
இந்தியா, பாகிஸ்தான், சீனாவிடமிருந்து ஆயுதங்கள், உதவிகள், பயிற்சிகள் என சகலத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது. இதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்களது கை ஓங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல தகவல்களை தந்து உதவியதாக இந்தியாவைப் பாராட்டியுள்ளார் நாணயக்காரா.
போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு நாடகம். இதை அறிவித்த முதல்வர் கருணாநிதி, ராஜபக்சேவுடன் ரகசியமாகப் பேசியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியிருப்பது நம்பும்படியாகவே உள்ளது.
பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பி ஓட மாட்டார். ஆனால் விரைவில் போர் உக்கிரமடையும். விடுதலைப் புலிகளின் கொரில்லா யுத்தம் இன்னும் செயலிழக்கவில்லை. அதில் நிச்சயம் புலிகள்தான் வெல்வார்கள் என்றார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications