2 மாத குழந்தைக்கு இருதய ஆபரேஷன்
சென்னை: சென்னை அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் 2 மாதமே ஆன பெண் குழந்தைக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து அக்குழந்தைக்குப் புத்துயிர் அளித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் கே. ஆர். பாலகிருஷ்ணன், இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர். ரவிக்குமார், இதய மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் சுரேஷ் ராவ், குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் ஜி. பிரபாகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஸ்ரேயா பிறந்து 2 மாதங்களே ஆகிறது. பிறந்தது முதலே குழந்தைக்கு இதயக் கோளாறு இருந்தது.
இதயத்தின் மையோட்ரல் வால்வில் கசிவு இருந்தது. இதன் காரணமாக, கை - கால்களில் நாடித் துடிப்பு குறைந்து காணப்பட்டது. குறைந்த ரத்த அழுத்தமும் இரு்நததால் மூச்சு விட குழந்தைக்கு சிரமம் ஏற்பட்டது.
இதயத் துடிப்பும் சீராக இல்லை. மிகவும் மோசமான நிலையில் மலர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 தினங்களுக்கு முன்பு ஸ்ரேயா அனுமதிக்கப்பட்டாள்.
அங்கு ஸ்ரேயாவின் இதயத்தில் உள்ள மையோட்ரல் வால்வு வடிவத்துக்கு சிறிய அளவில் செயற்கை வால்வு கிடைக்காது என்பதால், அதைச் சரி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோர் - டெக்ஸ் எனப்படும் வளையத்தைப் பயன்படுத்தி வால்வில் இருந்த பாதிப்பு மூன்று மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகச் சரி செய்யப்பட்டது.
தற்போது குழந்தைக்கு இருதயத் துடிப்பு, மூச்சு விடுவது, ரத்த அழுத்தம் ஆகியவை நார்மலாக உள்ளன.
அறுவைச் சிகிச்சையால் புத்துயிர் பெற்ற ஸ்ரேயா தற்போது தனது பெற்றோருடன் வீடு திரும்பியுள்ளாள் என்றனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications