டோரன்டோவை மீண்டும் ஸ்தம்பிக்க வைத்த தமிழர்கள் - 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கடந்த ஒரு வாரத்தில் தமிழர்களால் டோரன்டோ ஸ்தம்பித்தது இது இரண்டாவது முறையாகும்.
கனடா தமிழ் மாணவர் சமூகமும், கனடா தமிழர் சமூகமும் இணைந்து இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நாடாளுமன்றம் முன்பாக உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் இருந்து நேற்று புதன்கிழமை தொடங்கிய இப்பேரணி வெற்றிகரமாக நடந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கக் கொடி, அமெரிக்க, கனடா நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியபடி லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
குயின்ஸ் பார்க் மைதானத்தில் விடுதலைப் புலிகள் இயக்கக் கொடி, கனடா நாட்டு கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து பேரணி தொடங்கியது.
டோரன்டோ டவுன்டவுன் பகுதியில் உள்ள பல்கலைக்கழக வீதியில், உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் நோக்கி பேரணி சென்றது.
எந்தவித அசம்பாவிதமோ, வன்முறையோ, அமளியோ இல்லாமல் மிக மிக அமைதியான முறையில் தமிழர்கள் அணிவகுத்துச் சென்றதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
இசைக் கருவிகளைக் கொண்டும், வாயினாலும் முழங்கியபடி தமிழர்களின் பேரணி சென்றது.
இனப்படுகொலையை சித்தரிக்கும் துண்டுப் பிரசுரங்களையும் வழியெங்கும் தமிழர்கள் விநியோகித்தனர். மேலும் இனப்படுகொலையை சித்தரிக்கும் பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.
தமிழினப் படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர் நிறுத்தம் வேண்டும், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வான் வழியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார மற்றும் தூதரக தடை விதிக்கப்பட வேண்டும்,
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கனடா அரசு அங்கீகரிப்பதன் மூலமாக நிரந்த அமைதித் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முழங்கப்பட்டன.
பேரணியில் பல்வேறு வெளிநாட்டு மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும், பல நாட்டு மாணவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பேரணியின்போது சிங்களர்கள் சிலர் ஒரு வாகனத்தில் இலங்கை தேசிய கொடியோடு அங்கு வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications