அகதிகள் முகாம்கள்-நுழைய அனுமதி கோரும் யுனிசெப்
ஜெனீவா: போரினால் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தங்களது பணியாளர்களை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு ஐ.நா. குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் ஆன் வெனிமேன் விடுத்துள்ள அறிக்கையில், இடம் பெயர்ந்தோர்களுக்கான முகாம்களுக்கு வரும் பொதுமக்கள் உடல் நலக்குறைவுடனும், ஊட்டச்சத்து இல்லாமையிலும், காயங்களுடனும்தான் வருகின்றனர். அவர்களுக்கு ஆரோக்கியமான குடிநீர், சத்தான ஆகாரம், மருந்து ஆகியவை மிகவும் அவசரமாக தேவைப்படுகின்றன.
கடந்த சில நாட்களில் மட்டும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
போர் காரணமாக இடம் பெயர்ந்து வந்துள்ள அப்பாவி மக்களுக்கு உதவ பலவேறு சர்வதேச உதவிக் குழுக்கள் முயன்று வருகின்றன. யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் குடிநீர், உணவு, அவசரகால மருந்துகள், சமையல் பாத்திரங்கள், குடிநீர் சுத்திகரிக்கும் மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.
ஆனால் அனைத்து முகாம்களுக்கும் செல்ல அனுமதிக்காமல் சில முகாம்களுக்கு செல்ல மட்டுமே இலங்கை அரசு அனுமதிக்கிறது.
ஆனால் இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்கள் அனைத்துக்கும் செல்ல இலங்கை அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 10 ஆயிரம் கூடுதல் டென்ட் துணிகளை வழங்குவதைக அகதிகளுக்கான ஐ.நா. ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்க வீடுகள் கட்டித் தருவதற்கு நிலம் ஒதுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசுக்கு இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இடம் பெயர்ந்த தமிழர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கும் 42 இடங்களிலும அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications