அணுகுண்டுகள் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்த பாக். திட்டம்
வாஷிங்டன்: பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை வேகமாக்கி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர்களிடம் விரைவில் கைவசம் 200 அணுகுண்டுகள் இருக்கும் என அமெரிக்க கவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிடம் தற்போது 80 முதல் 100 அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் தனது அணுகுண்டு தயாரிப்பை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராவல்பிண்டிக்கு அருகே தேரா கசி ககன் என்ற இடத்தில் பாகிஸ்தான், அணு ஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியம் ஹெக்சா புளூரைடு மற்றும் யுரேனியம் மெட்டல் போன்றவற்றை தயாரித்து வருகிறது. மேலும், அங்கு புளூட்டோனியத்தை தனியாக பிரித்தெடுக்கும் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவியுள்ளது என்றார்.
அமெரிக்காவின் செயற்கோள் படங்களும் பாகிஸ்தானின் அணு ஆயுத ஆராய்ச்சி பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த அட்மிரல் மைக் மூலன் என்பவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்திருப்பது அவர்களுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுக்கும் சேர்ந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது என்றார்.
அமெரிக்காவின் உளவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்க தேவையான யுரேனியங்களை வேகமாக உற்பத்தி செய்து வருகிறது. இதே வேகத்தில் போனால் அவர்களது அணுகுண்டு எண்ணிக்கை விரைவில் இரட்டிப்பாகி 200 என்ற எண்ணிக்கையை தொட்டுவிடலாம்.
ஏற்கனவே சுவாட் பகுதியில் தாலிபான், அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணுகுண்டுகள் தீவிரவாதிகள் கையில் கிடைத்துவிட கூடாது என உலகமே பிரார்த்தனை செய்து வருகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணுகுண்டு உற்பத்தியை விரிவு செய்திருப்பது கவலை அளிக்கிறது என்றார்.
-
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்தியா சமத்து பிள்ளையாக.. சொன்னதை கேட்கிறது.. சீண்டிய அமெரிக்க அதிபர் மாளிகை.. நிலைமை மோசமாகுது! -
அமெரிக்கா தொலைத்த 6 அணுகுண்டுகள்.. ஈரான் கையில் கிடைத்தால் என்னவாகும்? -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி?












Click it and Unblock the Notifications