ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி பொறுப்பேற்றனர்

வெள்ளிக்கிழமையன்று மன்மோகன் சிங் தலைமையிலான 19 பேர் கொண்ட கேபினட் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து ஆறு அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சராக ப.சிதம்பரமும், பாதுகாப்புத்துறை அமைச்சரராக அந்தோணியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பொறுப்பேற்ற பின்னர் அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது.
குறிப்பாக கடலோரப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அந்தோணி.
பிரணாபும் பொறுப்பேற்றார்..
அதேபோல நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியும் இன்றே தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பிரணாப். அதன் பின்னர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அப்பொறுப்புக்கு அவர் வந்துள்ளார்.
நிதித்துறை செயலாளர் அசோக் சாவ்லா மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் பிரணாபை வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications