நாடு முழுவதும் 9 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி

2006ம் ஆண்டு நாடு முழுவதும் 568 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இவற்றில் 315 மண்டலங்களுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் விளைநிலங்கள் குறித்த விதி மற்றும் உற்பத்தி சார்ந்த இடச் சிக்கல்கள் இருந்ததால் பல பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான விதிகளில் சில புதிய திருத்தங்களை சமீபத்தில் மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி அருகருகே உள்ள சிறிய அளவிலான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை இணைத்து உருவாக்கப்படும் பேரளவு மண்டலங்களுக்கு உடனடி அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல, விளைச்சல் அல்லது உற்பத்தி சார்ந்த இடங்கள் எவை என்பதைத் தெளிவாக்கும் விதியையும் இணைத்துள்ளது அரசு.
இதனால் சில நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், 5000 ஹெக்டேருக்கும் குறைவாக உள்ள தங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஒன்றிணைத்துள்ளதாக அறிவித்து உடனடி அனுமதி பெற்றுள்ளன.
கல்ஃப் ஆயில் கார்ப்பரேஷன், எல் டி எம்மார், எம்ஜிஎஃப் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா டெக் ஆகியன மும்பை, பெங்களூர் மற்றும் கேரளத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி பெற்றுள்ளன.
பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் அனந்தபூர், மகாராஷ்டிரத்தில் ரத்னகிரியில் உயிரி தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கொடமண்டல் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இரண்டு பன்முக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைகின்றன.
2008-09ம் நிதியாண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி வருவாய் ரூ. 90,416 கோடி. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 36 சதவீதம் கூடுதலாகும்!.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications