பிரான்ஸ் விமான விபத்து-24உடல்கள் மீட்பு
ரியோ டி ஜெனீரோ: அட்லாண்டிக் பெருங்கடலில் 228 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 7 பேரின் சடலங்களை பிரேசில் மீட்புகுழுவினர் கைப்பற்றியுள்ளனர். இதனுடன் சேர்த்து இதுவரை 24 உடல்கள் கிடைத்துள்ளது.
கடந்த மே மாதம் 31ம் தேதி பிரேசில் இருந்து பிரான்ஸ் சென்று கொண்டிருந்த ஏர் பஸ் ஏ300 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி மாயமாகி மறைந்தது. தற்போது கிட்டதட்ட 10 நாட்களாகிவிட்ட நிலையிலும் மீட்பு பணிகள் பாதிகூட நிறைவேறவில்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது. பிரேசிலின் பெர்னான்டோ டி நேரோன்ஹா தீவுக்கு 640 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் பல கி.மீ. பரப்பளவுக்கு விமான பாகங்களும் பயணிகளின் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. விமானத்தின் வால் பகுதி, 12 சிதறிய பாகங்கள், ஒரு இறக்கைத் துண்டு ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கான மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பிரேசில் மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் வரை 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 24 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கிடைத்துள்ள உடல்கள் மற்றும் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து விபத்து குறித்து சில தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து ஏவியேஷன் பத்திரிகையின் ஆசிரியர் ராபர்ட் வால் கூறுகையில்,
சடலங்கை வைத்து அந்த விமானம் எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தது என்பதை தோராயமாக கண்டுபிடிக்க முடியும். அதே போல் விமானங்களை எப்படி உடைத்துள்ளன. விமானத்தின் பாகத்தில் என்ன வகையான சேதம் ஏற்பட்டுள்ளது போன்றவற்றை வைத்து கூட சில சமயங்களில் எந்த மாதிரி விபத்து நடந்துள்ளது என்பதை அறியலாம் என்றார் அவர்.
இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு பாரிசில் இருக்கும் நாட்ரே டேமே தேவாலயத்தில் பிரார்த்தனையும், அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications