சென்னை விமானத்தில் ஆஸ்திரேலியர் தகராறு
சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏர்ஹோஸ்டசை மோசமான வார்த்தைகளால் திட்டி ஆஸ்திரேலிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எக்கானமி கிளாஸ் டிக்கெட் வாங்கியிருந்த இந்தப் பயணி நேற்று மாலை விமானம் கிளம்ப சிறிது நேரத்துக்கு முன் கூடுதல் பணத்தைக் கட்டி பிஸினஸ் கிளாசுக்கு மாறினார். விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மதுபானம் கேட்டு வாங்கினார்.
பின்னர் டாய்லெட்டுக்குள் நுழைந்தார். ஆனால், அரை மணி நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பயணிகள் ஏர் ஹோஸ்டரிடம் கூறவே அவர் கதவைத் தட்டினார்.
உள்ளிருந்து எந்த பதிலும் சொல்லாத அந்த நபம் நெடுநேரம் தட்டிய பிறகு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து ஏர்ஹோஸ்டரை மோசமான வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.
உங்களுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று பயந்து தான் கதவைத் தட்டினோம் என்று பயணிகள் கூறியபோது அவர்களையும் அந்த நபர் திட்டினார். உடனே விமானத்தின் கேப்டனைப் பார்க்க வேண்டும் என தகராறு செய்தார்.
இந் நிலையில் விமானம் இரவு 10.30 மணிக்கு சென்னையை நெருங்கியது. அனைவரையும் சீட்களில் அமர்ந்து பெல்ட் போடுமாறு ஏர்ஹோஸ்டஸ்கள் கூறியபோது அதைக் கேட்காமல் லேண்டிங்கின்போது நின்று கொண்டே இருந்தார் அந்த நபர்.
இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் அவர் மீது விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார் விமானி. உடனே விரைந்து வந்த சிஐஎஸ்எப் படையினரை அவரை விமானத்திலிருந்து இறக்கி நேரகாக காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு சென்றவுடன் தன்னை மன்னிக்குமாறு ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார் அந்த நபர். இதையடுத்து அவரை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்.
மஸ்கட் பயணியிடம் தோட்டா!:
இதற்கிடையே சென்னையில் இருந்து மதுரை செல்ல இருந்த விமான பயணியிடம் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் மதுரை விமானத்தில் ஏற வந்தார். அவரது கைப்பையை சோதனையிட்டபோது அதில் 0.38 எம்எம் துப்பாக்கித் தோட்டா இருந்தது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, மஸ்கட்டில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாகதவும் தன்னுடன் பணிபுரிந்த அலெக்சாண்டர் என்பவர் சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டதையடுத்து அவரது உடலை சென்னை கொண்டு வந்ததாகவும்,
தோட்டா இருந்தது அலெக்சாண்டரின் கைப் பை என்றும், அதி்ல் தோட்டா இருந்தது தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
இதையடுத்து திருமுருகன் மதுரை செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அலெக்ஸாண்டரின் உடலும் இறக்கப்பட்டு அது திருமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications