இந்தியாவில் 31 பேருக்கு ஸ்வைன் ப்ளூ பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவில் இது பரவ துவங்கியுள்ளது. இதையடுத்து முடிந்தவரை அமெரிக்க பயணத்தை தள்ளி போடுங்கள் என மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவி்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதி, அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் இருந்து ஹைதராபாத் வந்த 11 வயது சிறுவனுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவனுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் நாசாவில் இருந்து டெல்லி வந்து மாணவர்கள் 8 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் நாசாவுக்கு சென்ற மற்ற 23 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 16 வீட்டுக்கு அனுப்பட்டனர்.
இது குறித்து பஞ்சாப் மாநில ஸ்வைன் ப்ளூ தடுப்பு அதிகாரி தீபக் பாட்டியா கூறுகையில்,
7 மாணவர்கள் மட்டும் தனி அறையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். தற்போது அவர்களில் மூன்று பேருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நான்கு பேரின் ரத்த மாதிரிகள் இன்று சோதனைக்காக தேசிய தொற்று நோய் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மேலும் ஐந்து பேருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் வேகமாக குணமடைந்து வருகி்ன்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் நெருங்கி பழகிய 296 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
ஸ்வைன் ப்ளூவை தடுக்கும் நோக்கத்தில் தேசிய தொற்று நோய் நிறுவனம் அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. மற்ற டாக்டர்களுக்கு இன்னும் இரண்டு நாளில் பயிற்சி கொடுக்கப்படும் என்றார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்?












Click it and Unblock the Notifications