தமிழகத்தில் 17,000 வீடுகள்-உலக வங்கி நிதி
சென்னை: தமிழகத்தில் இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் வகையில் கடலோர மாவட்ட மக்களுக்கு 17 ஆயிரம் வீடுகள் கட்டித் தர உலக வங்கி முன் வந்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் குறித்து விவாதிக்கும் கூட்டம் நேற்று தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு மத்திய அரசு, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவியுடன் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற சுமார் 3 ஆண்டுகளில் ரூ. 1,175 கோடி அளவுக்கு பல்வேறு திட்டப்பணிகளை முடித்துள்ளது என்றார் அன்பழகன்.
மத்திய அரசின் உதவியுடன் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கடலோர கிராமத்தினருக்கு 11 ஆயிரத்து 539 வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீடுகள் இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் திறன் கொண்டவை.
மேலும் அலைகள் தாக்கும் பகுதிகளில் இருந்து 200 மீ., தொலைவில் இந்திர அவாஸ் யோஜனா திட்டம் மூலம் 41 ஆயிரத்து 411 வீடுகளை கடலோர கிராமத்தினருக்கு கட்டிகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 772 கோடி செலவில் ராஜீவ் காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 21 ஆயிரத்து 141 வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இதில் தற்போது முதல் கட்டமாக 1,976 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மேலும் 17 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு உலக வங்கியிடம் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளது. சுனாமி, நிலநடுக்கும் போன்றவற்றை தாங்கி நிற்கும் இந்த வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ. 3 லட்சம் செலவில் கட்டப்படும். இதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தத்தில் உலக வங்கி இன்னும் இரண்டு மாதங்களில் கையெழுத்திடும்.
இந்த வீடுகளை 2011ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என உலக வங்கி கூறியுள்ளது. ஆனால் இத்திட்டம் அறிவித்த 18 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை சுனாமி மறுவாழ்வு பணிகள் மூலமாக மக்களுக்கு 37 ஆயிரத்து 904 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், சில பகுதிகளில் இந்த பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நொச்சிகுப்பம் மற்றும் ஸ்ரீனிவாசபுரம் பகுதிகளுக்கு இடையில் கட்டப்படவிருந்த 5 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளுக்கான இடமும், மெரினா மற்றும் எலியட் பீச்சுகளுக்கு இடையை இயக்கப்படும் ரயில்வே திட்ட வேலைகளும் ஒரே பகுதிக்குள் வருவதால் திட்டப்பணிகள் தாமதமடைந்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications